Be Silence

Be Silence – மவுனமாய் இருக்கலாமே…

Be Silence – மவுனமாய் இருக்கலாமே…

நாடே தூற்றியது…
நாவடக்கம் மீறியது…

நோயின் பெயராலே…
நோவினை செய்தது…

நரிகளின் ஊளையில்…
நானிலமே மாறியது…

Be Silence
மவுனமாய் இருக்கலாம்

நாடி நரம்புகள் தளர்ந்தது…
நம்பிக்கைகள் தகர்ந்தது…

காவியின் சூழ்ச்சிக்கு…
காலமும் கனிந்தது…

காணாத காட்சிகளெல்லாம்…
கண்களும் கண்டது…

வீணாக உதவி செய்து…
வீண் பழி சுமக்காமல்

விழிப்புடன் வீற்றிருப்போம்…
வீட்டிலேயே காத்திருப்போம்…

மதத் துவேஷம் மூண்டது…
மனிதாபிமானம் மாண்டது…

மருந்து இல்லா நிலையிலும்…
மரணமென்ற வலியிலும்…

மனம் நோக வாழ்வதை விட
மவுனமாய் இருக்கலாமே…

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

முந்தைய பதிவை படிக்க…  Covid 19 – Failure of the Union Government – ஒன்றிய அரசின் தோல்வி

Author: VALAIYUGAM
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *